ஆவேசத்தில் அமலாபால்

amala_paul_004தன்னைப் பற்றி வதந்திகள் பரவுவதால் ஆவேசத்தில் இருக்கிறாராம் அமலா பால்.

அமலாபால் தற்போது ஜெயம்ரவி ஜோடியாக ‘நிமிர்ந்து நில்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் இரண்டு மலையாள படமும், ஒரு தெலுங்கு படமும் கைவசம் உள்ளன.

இந்நிலையில் அவர் சம்பளத்தை உயர்த்திவிட்டதாகவும், இந்திப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு அவரை நீக்கி விட்டதாகவும் செய்திகள் பரவின.

இந்த செய்திகள் அவரின் காதுகளுக்கு எட்டவே கோபத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என்னைப்பற்றி தவறான செய்திகள் பரவி வருகின்றன. இந்திப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் வதந்தி பரவி உள்ளது.

மேலும் இந்திப் படத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை. அப்படி இருக்க நான் நீக்கப்பட்டேன் என்று எழுதுகிறார்கள்.

இது மனத்துக்கு வருத்தமாக இருக்கிறது என்றும் இது போன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கோபமாக கூறியுள்ளார் அமலாபால்.