அட்வான்ஸை மட்டுமே திருப்பிக் கொடுத்தேன்: சூர்யா

surya-Aதுருவ நட்சத்திரம் படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையை கௌதமிடமே திருப்பித் தந்துவிட்டார் சூர்யா.

சிங்கம் 2 வெற்றிக்குப் பிறகு சூர்யா கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதை விஷயத்தில் சூர்யா-கௌதம் மேனன் இடையே ஒத்துப்போகவில்லை. இதனால் சூர்யா படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.

இந்நிலையில் தான் சூர்யா, கௌதம் மேனனிடம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிட்டார். ஆனால் அவர் அட்வான்ஸ் தொகையுடன் கூடுதலாக பெரும் தொகையைத் தந்ததாக செய்திகள் வெளியாயின. அதாவது அவர், அட்வான்ஸ் தொகையை சேர்த்து மொத்தமாக ரூ. 10 கோடியை கௌதமிடம் அளித்தாராம்.

ஆனால் அட்வான்ஸ் தொகைக்கு மேல் கூடுதலாக அவர் 5 கோடி கொடுத்ததாக வந்த செய்திகளில் உண்மையில்லை. பொய்யான பெருமைகளை சூர்யா என்றுமே விரும்பியதுமில்லை. உண்மை வெளியில் தெரிந்தால் போதும் என்று சூர்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

“வாங்கிய முன்பணத்தைத் தந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சூர்யா, கௌதம் மேனனை வீட்டுக்கே வரவழைத்து அந்தத் தொகையை முழுவதுமாகக் கொடுத்துவிட்டராம்.