சந்தானத்தின் கொமடியெல்லாம் ஒரு கொமடியா? தயாரிப்பாளர் பாய்ச்சல்

santhanam_rajan_001சந்தானத்தின் கொமடி குறித்து சகட்டு மேனிக்கு விமர்சித்துள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன்.

ஜீவாவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் என்றென்றும் புன்னகை பட டிரெய்லரால் தான் இந்த விமர்சனங்களை சந்தித்துள்ளார் சந்தானம்.

என்றென்றும் புன்னகை படத்தில் அவர் கொமடி என்ற பெயரில் பேசி நடித்திருக்கும் ஒரு காட்சி அசிங்கத்தின் உச்சமாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் சந்தானத்தின் கொமடி குறித்து வெளுத்து வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன்.

அவர் பேசுகையில், இளைஞர்களையெல்லாம் ஒன்று திரட்டி ஒரு மீட்டிங் நடத்தணும், அதை எங்க நடத்தலாம்ணு ஒரு தலைவர் என்கிட்ட கேட்டார். உடனே நான் தமாஷா சாயங்காலம் 6 மணியிலேர்ந்து 8 மணிக்குள்ள தமிழ்நாட்ல இருக்கிற எல்லா பார்களுக்கும் போங்க. அங்கதான் எல்லா இளைஞர்களும் இருக்கிறாங்க. அங்கேயே மீட்டிங் நடத்திடலாம்ணு சொன்னேன்.

பாரதிராஜா, கே.பாலச்சந்தர் இவங்களோட படங்களில் ஆபாசம் என்பது கொஞ்சம் கூட இருக்காது. அதே மாதிரி இராம.நாராயணன் சாரோட படங்கள்லேயும் வல்காரிட்டி என்பதே சுத்தமா இருக்காது.

ஆனால் இப்பெல்லாம் கொமடிங்கிற பேர்ல நம்ம வீட்ல தாயும், மகளும் கூச்சப்படுகிற அளவுக்கு படத்துல காட்சிகள் இருக்கிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஒரு படத்தோட ட்ரெய்லர்ல ஒரு பொண்ணு வர்றா, அதிகாரிகிட்ட சார் அஞ்சு, பத்துக்கு போகணும்’ங்கிறா.

உடனே அந்த அதிகாரி “இல்லியே ரொம்ப ஜூட்டா இருக்கியே? நீ ஆயிரம் ஐநூறுக்கேப் போலேமே” ங்கிறான்.

அந்தப் பெண் அஞ்சு மணி பத்து நிமிடத்துக்கு நான் வீட்டுக்குப் போறேன்னு சொன்ன நல்ல செய்தியை நீ ஐநூறு, ஆயிரத்துக்கு போலாம்னு சொன்னா நீ என்ன ‘பிசினஸ்’ பண்றே? இது என்ன கொமடி? இந்த மாதிரி கொமடி பண்றதால உனக்கு என்ன கெடைக்கும் என்று கேட்டுள்ளார்.