என்னை செருப்பால் அடிப்பீங்களா? அஞ்சலி பாய்ச்சல்

anjali_001அஞ்சலி போன்ற நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும் என்று ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அஞ்சலி அவர் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளாராம்.

அறிமுக இயக்குனர் சஞ்சீவனின் வலியுடன் ஒரு காதல் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் இயக்குனர் சற்குணம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தனது ஊர்சுற்றி புராணம் படம் பாதியிலேயே நின்றதை பற்றி பேசினார்.

நடிகை அஞ்சலி திடீர் என்று ஓடிவிட்டதால் எனது ஊர்சுற்றி புராணம் படம் பாதியில் நின்றுவிட்டது என்றும் இது குறித்து நான் நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி உள்ளிட்ட சங்கங்களில் புகார் கொடுத்தும் பலனில்லை என்று கூறி வருத்தப்பட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் கூறுகையில், இனி அஞ்சலி மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமா படப்பிடிப்புகளில் நடந்து கொண்டார் என்றால் அவரை செருப்பால் அடிக்கவும் தயங்க மாட்டோம் என்றும் அஞ்சலி எங்கிருந்தாலும் அவரை கட்டி தூக்கி வந்து களஞ்சியம் படத்தில் நடிக்க வைப்போம் எனவும் கூறியுள்ளார்.

ஜாக்குவார் தங்கத்தின் பேச்சு குறித்து கேள்விபட்ட அஞ்சலி ஆத்திரம் அடைந்து எந்த சம்பந்தமும் இல்லாத அவர் எதற்காக என்னை செருப்பால் அடிக்க வேண்டும் என்று அவர் மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.