எனக்கு பிடிச்ச ஜோடி நயன்தாராதான்: ஆர்யா

aryaநயன்தாராதான் தனக்கு பிடிச்ச ஜோடி என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.

ஆர்யா, அனுஷ்கா முதன் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படம் தமிழகம் முழுவதும் 22ம் தேதி ரிலீஸாகிறது. இதையொட்டி படக்குழுவினர் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய ஆர்யா, அனுஷ்காவோடு நடிச்சாலும் இப்ப வரைக்கும் எனக்கு நயன்தாரா தான் பிடிச்ச ஜோடி. ‘இரண்டாம் உலகம்’ ரிலீஸான பிறகு அனுஷ்கா தான் பொருத்தமான ஜோடியா இருப்பாங்க. நான் இதுவரை நடித்த படங்களில், ‘இரண்டாம் உலகம்’ மிகப்பெரிய படம்.

இந்த படத்துக்காக ஒன்றரை வருடம் உழைத்து இருக்கிறேன். எந்த டைரக்டர் படமென்றாலும் கஷ்டப்பட்டு தான் வேலை செய்றோம். ஆனால் எங்களை விட செல்வராகவன் அதிகமாக கஷ்டப்படுறார். இந்த படம் நிச்சயம் பேசப்படக்கூடியதாக இருக்கும் என இவ்வாறு கூறினார்.

செல்வராகவன் இயக்கம் படங்களுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பெருத்த வரவேற்பும் எதிர்பார்ப்பும் உண்டு. ஒவ்வொரு படங்களிலும் தமிழ் திரைப்பட தடைகளை உடைத்து பல்வேறு தளங்களில் ஆய்ந்த கண்ணோட்டத்துடம் புதிய கதைகளம் இருப்பதே எதிர்பார்ப்பின் மைய காரணம். அத்தகைய எதிர்பார்ப்பு செல்வராகவன் இயக்கத்தில் வரவிருக்கும் இரண்டாம் உலகம் படம் மீதும் உள்ளது.