எம்.ஜி.ஆர், சிவாஜிக்குப்பிறகு விஜயசேதுபதிதான்!

VijaySethupathதென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனது கதாநாயகன் கேரியரைத் தொடங்கிய விஜயசேதுபதி, அதற்கடுத்து நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற்று வருகிறது. கைவசமும் நான்கைந்து படங்களை வைத்திருக்கிறார். ஆனபோதும். இப்போதும் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல், நல்ல கேரக்டராக யார் கொடுத்தாலும் நடிக்கிறார். அதோடு, தயாரிப்பாளர்களின் விரலுக்கேற்ற வீக்கமாக தனது சம்பளத்தையும் ஆளைப்பொறுத்து வாங்கிக்கொண்டு வருகிறார் என்கிறார்கள்.

இதனால் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் விஜயசேதுபதிக்கு ரொம்ப நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பட விழாவில், தமிழ்த்திரைப்படதயாரிப்பாளர் சங்கத்தலைவரான கேயாரும் தனது பங்குக்கு விஜயசேதுபதியைப் பற்றி சில விசயங்களை ஓப்பனாக பேசினார்.

அப்போது, தமிழ்த்திரையுலகில் தயாரிப்பாளர்கள் நஷ்டப்படக்கூடாது என்று நினைத்தவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜிதான். தாங்கள் நடிக்கிற படங்கள் நன்றாக வர வேண்டும் என்று முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களுக்குப்பிறகு இப்போது விஜயசேதுபதி அப்படி நினைக்கிறார். தான் நடிக்கிற ஒவ்வொரு படங்களும் வெற்றி பெற வேண்டும். தன்னை நம்பி பணம் போடுகிறார்கள் எக்காரணம் கொண்டு நஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதை உணர்ந்து நடிக்கிறார்.

அதனால் மற்ற ஹீரோக்களும், விஜயசேதுபதியை பின்பற்றினால், தயாரிப்பாளர்கள் நஷ்டப்படுவது தவிர்க்கப்படும் என்றார்.