மங்காத்தா – 2 இயக்க தயாராக இருக்கிறேன்: வெங்கட் பிரபு

venkat-prabhuமங்காத்தா திரைப்படத்தின் அடுத்த பாகம் எடுக்கப்படுமா என்று அஜீத் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அஜீத்தின் 50வது படமான மங்காத்தா படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியிருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் சாதனை படைத்தது. அத்துடன் அஜீத், வெங்கட்பிரபு திரை பயணத்தில் முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

இந்நிலையில் மங்காத்தா 2 எடுக்கப்படுமா என்று அஜீத் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மங்காத்தா திரைப்படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி மங்காத்தா – 2 பற்றி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் ”மங்காத்தா திரைப்படம் மக்கள்

மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. மங்காத்தாவைத் தொடர்ந்து அதன் அடுத்த பாகமான மங்காத்தா -2 வருமா என்ற எதிர்பார்ப்பும் இருந்து

வருகிறது. மங்காத்தா – 2 ஒருவேளை எதிர்காலத்தில் எடுக்கப்படலாம். நாங்கள் இப்படம் குறித்த எந்தவிதமான டிஸ்கசன்களிலும் இன்னும் ஈடுபடவில்லை; வெங்கட் பிரபு ஏற்கெனவே மங்காத்தா – 2 ற்கான கதைக் கருவை உருவாக்கிவிட்டார் என்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

இதனிடையே வெங்கட் பிரபு, ‘‘மங்காத்தா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அஜீத் சார் அடுத்த ஆண்டு முழுவதும் பிஸியாக இருக்கிறார். காலம் கூடி வந்தால் ‘மங்காத்தா 2’ஐ ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

‘மங்காத்தா’ படத்தை எடுக்கும் போதே நான் இரண்டு விதமான கதைகளை வைத்திருந்தேன். கடைசியில் நீங்கள் பார்த்த கதையைத்தான் ‘மங்காத்தா’வின் கதை என முடிவு செய்தோம்,” என்றார். மொத்தத்தில் அஜீத் மனது வைத்தால் மீண்டும் ஒரு ‘மங்காத்தா’ ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.