குரலை மாற்றிய விக்ரம்

vikramகெட்டப்பை மற்றுமில்லாமல் குரலையும் மாற்றி பேசுகிறாராம் சீயான் விக்ரம்.

சீயான் விக்ரம் என்றாலே படத்துக்குப்படம் மாறுபட்ட கதாபாத்திரங்களாக தெரிவு செய்து நடிப்பார். சேது, பிதாமகன், காசி, அந்நியன், தெய்வத்திருமகள் என்று அவரது வித்தியாசத்திற்கு உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

தற்போது ஷங்கரின் ‘ஐ’ படத்தில் ஒவ்வொரு கெட்டப்புக்காகவும் மாதக்கணக்கில் பயிற்சி எடுத்து நடித்தவர், கடைசியாக நடித்த ஒல்லிகுச்சி வேடத்துக்காகத்தான் ரொம்ப சிரத்தை எடுத்திருக்கிறார். முகமும், உடம்பும் மெலிந்து போய் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு உருமாற்றிக்கொண்டு நடித்துள்ளார்.

ஒருவழியாக படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது டப்பிங் பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது.

இதில் ஒவ்வொரு கெட்டப்புக்காகவும் ஒவ்வொரு விதமாக தனது குரலை மாற்றி பேசுகிறாராம் விக்ரம்.