ஹன்சிகாவுடன் இனி எந்த உறவும் இல்லை: சிம்பு

simbu with hansikaநடிகர் சிம்புவும் ஹன்சிகாவும் அடுத்தடுத்து வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்தனர்.  அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இது அரசல் புரசலாக வெளியில் வந்த நேரத்தில், இருவருமே ட்விட்டர் வழியாக தங்கள் காதலை வெளிப்படுத்தினார்கள். ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்றும் அறிவித்தனர். ஆனால் இந்த காதலை ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி ஏற்கவில்லை.

தன் மகளின் எதிர்காலம் பாதிக்கும் என்று நினைத்த அவர், இப்போதைக்கு இதைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று கூறிவந்தார்.. ஆனால் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் மகனின் காதலை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் தன் புதுப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அவர் முன்னாள் காதலி நயன்தாராவை ஒப்பந்தம் செய்ததால் பிரச்சனை உருவானதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் சிம்பு, ஹன்சிகா என் காதலி, நயன்தாரா என் தோழி என்று கூறினார்.

அப்போது இருவருக்கும் இடையே இடைவெளி அதிகரித்தது. இதனிடையே  கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று, தனக்கு யாருடனும் உறவில்லை என்று அறிவித்த ஹன்சிகா, தான் இனி தனி ஆள் என்று ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டார். ஹன்சிகாவின் அறிவிப்பால் கோபமடைந்த சிம்பு தற்போது ஹ்ன்சிகாவுடன் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இத குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருந்தது. ஹன்சிகாவுடனான காதலால் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். ஆகையால்,  ஹன்சிகாவுடனான தொடர்பை முறித்துக் கொண்டதாக சிம்பு அறிவித்துள்ளார் தற்போது நான் யாரையும் காதலிக்கவில்லை.,

தனியாகத்தான் இருக்கிறேன்.  ஆழ்ந்து யோசனைக்கு பிறகே இதை முடிவு செய்துள்ளேன். இனிமேல், ஹன்சிகாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஹன்சிகா எனது கடந்த காலம். எந்த கட்டாயத்தினால் இந்த முடிவை எடுத்தேன் என்பதை இங்கே நான் கூறமுடியாது.

இந்த அறிக்கையை என்னுடைய நண்பர்கள், நெருங்கியவர்கள், ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளேன். இப்போதைக்கு என்னுடைய நடிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த உள்ளேன். இந்த முடிவால் நான் மிகவும் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.