குஷ்புவுக்கு மீண்டும் கோயில்?

kusboo_001தமிழ்நாட்டில் நடிகை குஷ்புவுக்கு மீண்டும் கோயில் ரெடியாகப் போகின்றது என்று ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு தமிழ்சினிமாவில் மிக உச்சத்தில் இருந்த சமயத்தில் அவருக்கு தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் திருச்சி அருகே குஷ்புவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தினர்.

ஒரு நடிகைக்கு கோவில் கட்டிய செய்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இதுமட்டுமல்லாமல். குஷ்புவின் பெயரில் இட்லி விற்பனை தொடங்கியது. இது தமிழ்நாட்டில் இன்றும் நடைபெறுகிறது.

இந்நிலையில் தற்போது குஷ்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கா எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். குஷ்புவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ட்விட்டரில், ”வாவ்… என்னமா இருக்கீங்க… சீக்கிரமா உங்களுக்கு இரண்டாவது கோவில் ரெடி ஆகப் போகுதுன்னு நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

“குஷ்புவுக்கு இன்னொரு கோவில் கட்ட இடம் பார்க்க வேண்டும்” என்று மற்றொரு ரசிகரும் தெரிவித்துள்ளார். இந்த 2 ரசிகர்களின் கருத்திற்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.