எதிர்பார்த்தது கிடைக்கவில்லையே! கவலையில் நடிகர் ராமராஜன்

ramarajan_001தூத்துக்குடி அதிமுக வேட்பாளராக தன்னை கட்சி தலைமை அறிவிக்கும் என எதிர்பார்த்த நடிகர் ராமராஜன் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம் வந்த ராமராஜன் அதிமுகவில் இணைந்தார். முன்பு தூத்துக்குடியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார்.

இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தன்னை தூத்துக்குடி வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என்று ராமராஜன் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தார்.

ஆனால் ஜெயலலிதாவோ ஜெயசிங் நட்டர்ஜியை தூத்துக்குடி வேட்பாளராக அறிவித்துவிட்டார். அவரும் தொண்டர்களுடன் களம் இறங்கி ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றார்.

இதனால் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்று ராமராஜன் சோகத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.