மீண்டும் ரசிகர் மன்றம்: அஜித் அதிரடி!

ajithதமிழ் திரையுலகம் மட்டுமல்லாது அனைத்து திரையுலகைச் சேர்ந்த பல நடிகர்களுக்கும் தங்களது பெயரில் ரசிகர் மன்றங்கள் வைத்துள்ளனர்.

அதில் ஒருசிலரை தவிர பெரும்பான நடிகர்கள் தங்களது ரசிகர்களை எப்போதுமே சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நடிகர்கள் தங்கள் படங்கள் ரிலீசாகும்போது, ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுவது. திரையரங்குகளில் தங்களுக்கு ராட்சத கட்-அவுட்கள் வைத்து பாலபிஷேகம் செய்வது போன்ற விஷயங்களுக்காகத்தான் ரசிகர் மன்றங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர் மன்றங்களை தங்களுக்கு பெரிய பலம் என்று பெருவாரியான நடிகர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அஜித் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்.

ரசிகர் மன்றத்தில் அரசியல் நுழைகிறது என்று தெரிந்ததும் உடனடியாக மன்றங்கள் அனைத்தையும் கலைத்தார். இருப்பினும் ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை. அவரது பிறந்த நாள் மற்றும் படங்கள் வெளியாகும்போது தாங்களது சொந்த பணத்திலேயே கட்அவுட்கள் வைத்து வருகிறார்கள். மாறாக அவரது படங்களும் முன்பை விட வசூலை வாரிக்குவித்து வருகிறது. இது அஜித்துக்கு பெரிய நெருடலை ஏற்படுத்தியுள்ளது. மன்றமே இல்லேன்னு சொல்லிட்டேன். அப்படியிருந்தும் என் மேல இவ்வளவு அன்பும், உயிரும் வைத்திருக்கும் அவர்களுக்காக மீண்டும் ரசிகர் மன்றத்தை நடத்தலாமா? என்று தனது சகாக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம் அஜித்.

மீண்டும் மன்றம் ஆரம்பித்தால் அதை எப்படி நடத்த வேண்டும், மன்றத்தில் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என கூடவே பல கண்டிஷன்களும் போடப் போகிறதாம். அதாவது, மீண்டும் ரசிகர் மன்றத்தை திறந்தால் அதில் உறுப்பினர்களாக உள்ள ரசிகர்கள் நற்பணியை மட்டுமே செய்ய வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சிக்கும் மன்றம் சார்பிலோ தனிப்பட்ட முறையிலோ ஆதரவு அளிக்கக் கூடாது. அதேபோல எந்த ஒரு அரசியல் கட்சியுடன் ரசிகர் மன்றக்கொடியையும் சேர்த்து பறக்க விடக் கூடாது என்று இப்படி பல கண்டிஷன்கள். எது எப்படியோ? இனி அஜித் ரசிகர்களை என்ன சொல்லவா வேண்டும். சந்தோஷத்தில் துள்ளி குதிப்பார்கள்.