அரசியலுக்கு வர மாட்டேன்: அருள்நிதி!

Arulnidhiதி.மு.க. கழக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதி. தற்போது வளர்ந்து வரும் நடிகர். அவர் நடித்த ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படம் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது.

நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தில் நடித்து வருகிறார். கருணாநிதியின் பேரன்கள் அரசியலுக்கு வருவதற்குத்தான் சினிமாவில் நுழைகிறார்கள் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. இதனை மறுத்த அருள்நிதி, நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: என்னோட அப்பாவே அரசியலில் இல்லாதபோது நான் எப்படி அரசியலுக்கு வருவேன். அரசியல் வாசனை இல்லாமல்தான் அப்பா என்னை வளர்த்திருக்கிறார். அரசியலில் ஈடுபாடுகாட்ட விடமாட்டார்.

அவரும் சில படங்கள் எடுத்துட்டு பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். நான் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று சொன்னதும் அரசியலுக்கு வரப்போகிறாயா? என்றுதான் கேட்டார்.

தாத்தாகிட்ட சினிமால நடிக்கப்போகிறேன்னு சொன்னதும் “நடிக்கிற வேலையை மட்டும் பார் அரசியலுக்கெல்லாம் வராதே”ன்னு சொல்லிட்டார்.

இன்னமும் நல்லா நடிக்கணும்னு சொல்லிகிட்டிருக்கிறார். “பிரமாதமா நடிச்சிருக்கே” என்று ஒரு சொல் அவர்கிட்ட வாங்கினா போதும். இப்போதைக்கு இதுதான் லட்சியம் என்கிறார் அருள்நிதி.