சந்தானம் கொடுத்த சக்சஸ் பார்ட்டி!

sanபடம் வெளியான அன்றே சக்சஸ் பார்ட்டி வைக்கும் கலாச்சாரம் கோடம்பாக்கத்தில் ஆரம்பித்திருக்கிறது. விஷால் நடிப்பில் நான் சிகப்பு மனிதன் படம் கடந்த மாதம் வெளியானபோது, முதல் நாள் ஓப்பனிங்கை வைத்து, படம் சூப்பர் ஹிட் என்று முடிவு செய்தனர்.

உடனே தன் நண்பர்கள் அனைவருக்கும் தகவல் அனுப்பி சக்சஸ் பார்ட்டிக்கு அழைப்புவிடுத்தார் நான் சிகப்பு மனிதன் படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான விஷால்.

சென்னையில் உள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற அந்த சக்சஸ் பார்ட்டியில் பிரபல நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இதற்காக பல லட்சங்களை செலவு செய்தார் விஷால்.

சக்சஸ் பார்ட்டி முடிந்த இரண்டு நாட்களில் நான் சிகப்பு மனிதன் திரையிட்ட தியேட்டர் வெறிச்சோடிப்போனது. படம் ப்ளாப் என்பது உறுதியானது. இப்படியொரு காமெடி நடந்தும் கூட சக்சஸ் பார்ட்டி வைக்கும் கலாச்சாரம் தொடர்வதுதான் ஆச்சர்யம்.

சந்தானம் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் வெளியான அன்றே சக்சஸ் பார்ட்டி வைத்து அசரடித்திருக்கிறார் சந்தானம். இந்த பார்ட்டிக்கு முதல் அழைப்பு யாருக்கு தெரியுமா? மன்மதன் படத்தின் மூலம் தன்னை சினிமாவுக்கு அழைத்து வந்த சிம்புவுக்குத்தான்.

நடிக்கும் படங்கள் எல்லாம் ட்ராப்பாக, பார்ட்டிகளில் கலந்து கொள்வதையே முழுநேரமாக வைத்திருக்கும் சிம்பு சந்தானத்தின் அழைப்பை ஏற்று சக்சஸ் பார்ட்டிக்கு வந்து தாகசாந்தி செய்து திரும்பி இருக்கிறார். சந்தானத்தின் பார்ட்டியில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும், லட்சுமிராயும் போதை தலைக்கேற செம குத்தாட்டம் போட்டனராம்.