வெளியான மூன்றே நாட்களில் ரூ.42 கோடி: கோச்சடையான் சாதனை

2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ரஜினி நடித்து வெளியான கோச்சடையான் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ 42 கோடியை வசூலித்துள்ளது.

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அனிமேஷன் படங்களுக்கு இந்தியாவிலொ போதிய வரவேற்பு இல்லததால் கோச்சடையான் குறித்து எதிர்மறையான கருத்துக்கள் நிலவிவந்தன. ஆனால் நடந்ததோ வேறு. இப்படம் படம் கடந்த 23-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. ரஜினியின் மகள்  சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படம் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியிடபட்டது. உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்த படம் இந்தியாவில் மட்டும்  30கோடி வசூலித்துள்ளது வெளிநாடுகளில் 12 கோடி வரை வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 100கோடிக்கு மேல் வசூல் சாதனை படைக்கும் என்று சினிமா வர்த்தகர்கள் கூறிவருகின்றனர்.

பாலிவுட் – கோச்சடையானை பின்னுக்குத் தள்ளிய எக்ஸ்மென்

பாலிவுட்டில் 23ம் தேதியன்று ‘கோச்சடையான், எக்ஸ்மென், ஹீரோபான்டி’ ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் ஹீரோபான்டி மட்டுமே ஒரிஜனலான ஹிந்தித் திரைப்படம்.
இந்த படத்தில் நடிகர் ஜாக்கி ஷெராப் மகன் டைகர் ஷெராப் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார்.

மேற் சொன்ன மூன்று படங்களில் வசூல் ரீதியாக மிகப் பெரிய ஓபனிங்கை ஏற்படுத்தியது எக்ஸ்மென் படம்தானாம். கோச்சடையான படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு ஓபனிங் இல்லையாம். காரணம் படம் சொன்ன தேதியில் வெளிவராமல் இருவாரங்கள் கழித்து வெளிவந்ததே என்கிறார்கள்.

அதே சமயம் ‘ஹீரோபான்டி’ படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது என்கிறார்கள். முதல் நாளிலேயே சுமார் 7 கோடி ரூபாயை வசூல் செய்துள்ள இப்படத்தின் வசூல் போகப் போக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பாலிவுட் திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

எக்ஸ்மென் படத்திற்கு 70 சதவீதத்திற்கு மேலும், ஹீரோபான்டி படத்திற்கு 60 சதவீதத்திற்கு மேலும், கோச்சடையான் படத்திற்கு 30 சதவீதததிற்கு மேலும்தான் திரையரங்குகளில் கூட்டம் கூடியதாம்.

ஹிந்தியில் மிகப் பெரிய செலவு செய்து கோச்சடையான் படத்திற்கு விளம்பரம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி ரசிகர்கள் கோச்சடையான் படத்தில் உருவாக்கப்பட்டுள்ள அனிமேஷனை அவ்வளவா ரசிக்கவில்லையாம். ஆனாலும், படத்தின் கதையம்சம் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் போகப் போக கூட்டம் கூடும் என்கிறார்கள்.

ஆந்திராவிலும் கோச்சடையானுக்குப் பின்னடைவு…!

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள கோச்சடையான் திரைப்படம் வெளியான சில தினங்களுக்குள்ளேயே உலகம் முழுவதும் சுமார் 42 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று தெரிவித்தது.

ஆனால், தமிழில் மட்டுமே படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், மற்ற மொழிகளில் கோச்சடையான் பலமான போட்டியைச் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஹிந்தியில் வெளியான ‘ஹீரோபான்டி’ படம் கோச்சடையானுக்கு போட்டியாக விளங்குவது போல், இந்திய சினிமாவில் முக்கிய திரையுலகான தெலுங்கிலும் கோச்சடையானுக்குப் போட்டியாக ‘மனம்’ திரைப்படம் விளங்கி வருகிறது.

ஆந்திரத் திரையுலகில் அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வரும் இந்த படத்தால் கோச்சடையான் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லையென்கிறார்கள். இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகிய சில தினங்களுக்குள் ‘கோச்சடையான்’ சுமார் 4 கோடி ரூபாயை மட்டுமே வசூல் செய்துள்ளது. ஆனால், ‘மனம்’ திரைப்படம் அதைவிட இருமடங்காக சுமார் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய இந்திய மொழித் திரைப்படங்களுக்குத்தான் அதிக வரவேற்பு இருக்கும். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் ‘கோச்சடையான்’ படம் ‘ஹீரோபான்டி, மனம்’ படங்களின் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதாம்.

முன்னர் திட்டமிட்டபடி கோச்சடையான் படம் மே 9ம் தேதி வெளிவந்திருந்தால் இந்த போட்டி எதுவுமில்லாமல், வசூல் ரீதியாக இன்னும் பல சாதனையை புரிந்திருக்கும் என திரையுலகத்தினர் சொல்கிறார்கள்.