ஓட்டம் பிடிக்கும் படாதிபதிகள்! தடுமாறி நிற்கும் கடல் கெளதம்!

kauthamAநவரச நாயகன் கார்த்திக் தனது மகன் கெளதமை மோதிரக்கையால் குட்டுப்பட வைக்க வேண்டும் என்பதற்காக, மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகம் செய்தார். அதனால் தனது மகனின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கப் போகிறது என்று எதிர்பார்த்தார், கார்த்திக். ஆனால் கடல் அவருக்கு பலத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இருப்பினும், முதல் படம் ஓடாத எத்தனையோ ஹீரோக்களுக்கு இரண்டாவது படம் ஒர்க்அவுட்டாகி பெரிய நடிகர்களாகியிருக்கிறார்கள் என்று மகனை தேற்றி அடுத்தடுத்து படங்களிலும் உற்சாகத்தோடு நடிக்க வைத்தார்.

ஆனால், இப்போது கெளதம் நடிப்பில் இரண்டாவதாக வெளியாகியுள்ள என்னமோ ஏதோ படமும் சத்தமே இல்லாமல் அடங்கி விட்டது.

இதனால், அடுத்தபடியாக அவர் கைவசம், வை ராஜா வை, சிப்பாய், இந்திரஜித் உள்பட சில படங்கள் இருந்தபோதும், முதல் இரண்டு தோல்விகளைக்கண்டு உற்சாகமிழந்து போயிருக்கிறார் கெளதம்.

அதோடு, அவரை நம்பி பணத்தை கொட்டி செலவு செய்து கொண்டிருந்த படாதிபதிகளும் சோர்ந்து விட்டார்கள். இவரை நம்பி போடுற பணம் கடல்ல உப்ப அள்ளி போட்டக்கதையாகி விடுமோ என்று கலங்கிப்போய் நிற்கிறார்கள்.

விளைவு, எனது மூன்றாவது படத்தில் நடிக்கும்போது ஒரு கோடி சம்பளம் வேண்டும் என்று தில்லாக கூறி வந்த கெளதம், அடுத்தடுத்து தன்னை வைத்து படம் தயாரிக்க சுற்றிக்கொண்டிருந்த படாதிபதிகள் அனைவருமே தெறித்து ஓடி விட்டதால், அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் தடுமாறிப்போய் நிற்கிறார்.