கதை திரைக்கதை வசனம் இயக்கம் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய பார்த்திபன்!

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்றிருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம்.

இவருடன் இயக்குனர்களாக இருந்தவர்கள் அனைவரும் இளைய தலைமுறை இயக்குனர்களோடு போட்டி போட முடியாமல் ஒதுங்கியிருக்கும் வேளையில் தைரியமாக ஒரு படத்தை எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இந்த வெற்றி இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் சக்சஸ் பார்ட்டி சென்னை பிரசாத் லேப்பில் நேற்று நடந்தது.

இந்த வெற்றி கொண்டாட்டத்தில் இயக்குனர் பார்த்திபன் உடன் தம்பி ராமைய்யா, இசையமைப்பாளர் சத்யா, மனீஷ்ய புத்திரன் மற்றும் கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படக்குழுவினரும் கலந்துகொண்டனர். 25 வருடங்களுக்கு பிறகு கிடைத்த இந்த வெற்றியை பார்த்திபன் நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

மேலும் படத்தின் வெற்றி அவரை ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால், இந்தப் படத்தின் கதையென்னவாக இருக்கலாம் என்றுதானே நினைக்கிறீர்கள், முதல் பாகம் போலவே இதிலும் கதை எதுவும் இருக்காதாம்…!