‘கத்தி’ பட வசனத்தால் வழக்கு தொடரப்பட்டுள்ளது !

vazhakkuதீபாவளிக்கு வெளியான ’கத்தி’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. முருகதாஸ், விஜய் , அனிருத், சதீஷ் ஆகிய நால்வரும் கோவையில் ‘கத்தி’ பட வெற்றி விழாவைக் கொண்டாடினர். ஊடகங்களில் விஜய் பேசும் வசனத்திற்கு கைத்தட்டல்கள் பறந்தன. ஆனால், தற்போது அந்த வசனத்தால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

” 2ஜி ன்னா என்ன? வெறும் காத்துய்யா… அதுலயே ஊழல் பண்ணின தேசம் இது! ” இதுதான் அந்த சர்ச்சைக்குரிய வசனம். நீதிமன்றம் தீர்ப்பு அளிக்காமல் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கு குறித்து உறுதியாக ஊழல் செய்ததாக சொல்வது தவறு. இது நீதிமன்றத்தை அவமதிப்பதாக அர்த்தம் ” என்று மனுதாரர் மனுவில் கூறப்பட்டுள்ளது. ‘கத்தி’ இயக்குநர் முருகதாஸ் மீதும், நடிகர் விஜய் மீதும் மதுரையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நீதிபதி நவம்பர் 11ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.