அம்மாவுக்கு கோவில் கட்டுகிறார் ராகவா லாரன்ஸ்!

Raghava-Lawrence-350x262இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தீவிர ரஜினி ரசிகர். அதனால் ரஜினியின் குருவான ஸ்ரீராகவேந்திரருக்கு கோவில் கட்டி உள்ளார். இது தவிர ஆதரவற்ற, மாற்று திறனாளி குழந்தைகளுக்காக இல்லம் நடத்துகிறார். இப்போது தன் தாய் கண்மணிக்கு கோவில் கட்டுகிறார்.

இதற்காக பூந்தமல்லி அருகே உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் இடம் தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் தாயின் சிலை செய்ய ஆர்டர் கொடுத்துள்ளார்.
அவரது பிறந்த நாள் இன்று (அக் 29). அதையட்டி தாய்க்கு கோவில் கட்டும் பணியினை இன்று தொடங்கி உள்ளார்.

இதுபற்றி ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது: தாயின் மனதே ஒரு கோயில் தான் அந்த தாய்க்கு, அந்த தாய் வாழும் போதே கோயில் கட்டி பெருமைபடுத்தவேண்டும் என்பதே எனது ஆசை. என் தாய் மட்டும் இல்லை என்றால் நான் எப்போதோ நான் இறந்த இடத்தில் புல் முளைத்திருக்கும் எல்லோருக்கும் கண்ணெதிரே தெரியும் ஒரே தெய்வம் பெற்ற தாய்தான்.

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்ற உயரிய கருத்தை மெய்ப்பிக்க வேண்டும். என்ற ஆசையால் இந்த கோயிலை கட்ட உள்ளேன். என் தாய்க்கு மட்டும்மல்ல உலகத்தில் உள்ள எல்லா தாய்க்கும் நான் இதை சமர்ப்பிக்கிறேன்.

என் தாய் என்னை வளர்ப்பதற்காக பட்ட கஷ்டங்களை ஒரு புத்தகமாக அடுத்த வருடம் இதே தேதியில் அந்த கோயில் திறப்பு விழாவில் வெளியிட உள்ளேன். என்கிறார் ராகவா லாரன்ஸ்.