மதுவுக்கு அடிமையானவனின் வாழ்க்கையை படமாக எடுக்கும் பாண்டியராஜனின் உதவியாளர்

babaஇயக்குனர் ஆர். பாண்டியராஜனின் ‘டபுள்ஸ்’ மற்றும் பல இயக்குனர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கோ.செந்தில்ராஜா ‘நாளை முதல் குடிக்கமாட்டேன்’ என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார்.

மதுவிற்கு அடிமையான ஒருவன் தன் வாழ்க்கையில் எதையெல்லாம் இழக்கிறான், அதனால் அவனுக்கு ஏற்படும் பிரச்சினையில் இருந்தும் குடிப்பழக்கத்தில் இருந்தும் எப்படி மீண்டு வருகிறான்? என்பதை நகைச்சுவையுடன் கூடிய திரைக்கதையுடன் கூறும் படமாக இது உருவாகி வருகிறது.

இப்படத்தில் ராஜ், காந்தராஜ், சம்ர்தின், பனிமதி போன்ற புதுமுகங்கள் நடிக்க முதல் கட்ட படபிடிப்பு இதுவரை படபிடிப்பு நடக்காத கள்ளகுறிச்சி மற்றும் சின்ன சேலம் அருகே உள்ள வாசுதேவனூர், ராயப்பனூர், எலித்தூர் போன்ற எதார்த்தம் மாறாத கிராமப்புறங்களில் நடந்து முடிந்துள்ளது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு ‘புன்னகை’ வெங்கடேஷ், இசை ஆர்.சிவசுப்பிரமணியன், இப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை பி.தேவன் கவனிக்க, இணைத்தயாரிப்பு செய்கிறார் ஜி.இளவரசி. பனிமதி பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக எம்.ஜி.ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்காக பரபரப்பாக அடுத்தகட்ட படப்பிடிப்பை பைத்தந்துறை, தென் செட்டியந்தல், நமச்சிவாயபுரம் ஆகிய கிராமப்பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு இம்மாதம் படப்பிடிப்பு தொடரவுள்ளனர்.

-http://123tamilcinema.com