ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும்:புதிய மனு

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கலாகி உள்ளதாகத் தெரிகிறது.நடிகர் சங்கத்துக்கு வருகிற ஜூலை மாதம் 15ம் திகதி தேர்தல் நடக்க உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் போட்டியிடுவதாக இல்லை என்று நடிகர் சந்திர சேகர் ஒதுங்கியதோடு, நடிகர் சங்கத்துக்குள் அரசியல் கலந்து விட்டது என்கிற குற்றச்சாட்டையும் வைத்துள்ளார் அவர். இந்நிலையில் நடிகர் விஷால் மற்றும் நடிகர் நாசர், நடிகர் கார்த்தி ஆகிய மூவர் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றுத் தாக்கலாகி உள்ளது.

அந்த மனுவில், நடிகர் சங்கத் தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடத்த வேண்டும், தேர்தலை வார நாளில் அல்லாமல் விடுமுறை நாளில் நடத்த வேண்டும், என்பன போன்ற கோரிக்கைகள் வைக்கப் பட்டுள்ளன என்று தெரிய வருகிறது. மேலும், உறுப்பினர்கள் பட்டியலையும் தர மறுக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கவும் மனுதாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-http://www.4tamilmedia.com