ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கூடாது: எமி ஜாக்சன், விராத் கோஹ்லி வலியுறுத்தல்

jallikattu_ban_001தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்ககூடாது என்ற மனுவில் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, நடிகை எமி ஜாக்சன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டின் போது மாடுகள் துன்புறுத்தப்படுவதாக கூறி கடந்த 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது.

இந்த தடைக்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சியினர், பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த தடையை நீக்கக்கூடாது என்று பிராணிகள் வதைதடுப்பு சங்கத்தினர் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக மனு ஒன்றை அவர்கள் தயாரித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அந்த மனுவில் நடிகைகள் வித்யா பாலன், சோனாக்‌ஷி சின்ஹா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், பிபாஷா பாசு, ஷில்பா ஷெட்டி, எமி ஜாக்சன் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விராத் கோஹ்லி, ஷிகார் தவாண் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

-http://www.newindianews.com