இளையராஜா இசையை கேட்டு 50 பேர் ஓவியம் வரையும் நிகழ்ச்சி: நடிகர் நாசர் பேட்டி

ilayaraja1நடிகர் சங்க தலைவர் நாசர், டைரக்டர் ஜனநாதன் ஆகியோர் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, இசையமைப்பாளர் இளையராஜா தமிழ் சமுதாயத்துக்கு கிடைத்த பொக்கிஷம். இதுவரை 1000 படங்களுக்கு அவர் இசையமைத்து இருக்கிறார். இது பெரிய சாதனை ஆகும். இதனை பாராட்டும் விதமாக சினிமாவை சாராத அவரது இசை ஆல்பங்களை ஓவியமாக தீட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இது புதிய முயற்சி ஆகும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இசையை சிற்பமாகவும், ஓவியமாகவும் படைத்து உள்ளனர். அதன்பிறகு விட்டுப்போன அந்த சரித்திரத்தின் நீட்சியாக இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இளையராஜாவின் இசையை ஓவியமாக மாற்றும் நிகழ்ச்சி வருகிற 31–ந்தேதி பெசன்ட் நகரில் ஓவியர் சந்துரு தலைமையில் நடைபெறும். இதில் 50 ஓவியர்கள் கலந்து கொண்டு இசையை கேட்டபடி ஓவியம் வரைகிறார்கள். பின்னர் அந்த ஓவியங்கள் லலித் கலா அகடமியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என்றனர்.

-http://www.nakkheeran.in