கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி உயிரிழந்த நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இதுதொடர்பான விசாரணைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், கலாபவன்மணியின் கல்லீரல், சிறுநீரகம், ரத்தம் உள்பட உடல் உறுப்புகள் ஐதராபாத்தில் உள்ள மத்திய ஆய்வுக்கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
தற்போது அந்த பரிசோதனை முடிவுகள் திருச்சூர் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.
அந்த அறிக்கையில் கலாபவன்மணியின் உடலில் மெத்தனால் என்ற ரசாயன பொருள் 45 மில்லி கிராம் அளவுக்கு கலந்திருப்பது தெரிய வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இது அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்ததாகவும் மது அருந்தும்போது இந்த அளவுக்கு மெத்தனால் உடலில் கலக்க வாய்ப்பு இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை முடிவால், மீண்டும் பொலிசார் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளனர்.
-http://news.lankasri.com

























நல்ல ஒரு கலைஞர். அவருக்கு இப்படி ஒரு முடிவு.