சினிமாவில் சில நாட்களாக தற்கொலை சம்பவங்கள் அரங்கேறிவருகிறது. இதற்கு பின்புலனாக பல காரணங்களால் அது திட்டமிட்ட கொலை சம்பவம் என்றே சொல்லப்படுகிறது.
தற்போது பாகிஸ்தானில் பிரபல நடிகை மற்றும் நடன கலைஞர் குயிஸ்மட் பெய்க், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
அவரை பின் தொடர்ந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தள்ளியது. இதில் ஒருவன் இனி எப்படி நீ ஆடுவாய் என்று பார்க்கிறோம் என்று சொன்னதாக தகவல் வந்துள்ளது.
அந்நடிகையின் மீது 12 குண்டுகள் பாய்ந்ததாக பிரேத பரிசோதனை குறிப்பு கூறிருக்கிறது. அந்த காரை ஓட்டியவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த அந்த நடிகையின் கொடூர கொலை சம்பவம் அந்நாட்டவர்களை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-http://www.cineulagam.com

























