ஸ்பெயினில் மாட்டை கொள்கிறார்கள், ஆனால்? ஜல்லிக்கட்டு குறித்து அதிரடி கருத்து கூறிய ஜெயராம்

jayaramமலையாளம் மட்டுமின்றி தமிழிலும் பல படங்களில் நடித்தவர் ஜெயராம். இவர் சமீபத்தில் தன் நண்பர் ஜல்லிக்கட்டு குறித்து எடுத்த புகைப்படங்களை அவரிடம் காட்டினார்.

அந்த புகைப்படங்களை பார்த்த பிறகு ‘எனக்கு ஜல்லிக்கட்டு மிகவும் பிடிக்கும், அதை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஸ்பெயினில் ஒரு மாட்டை பல வருடமாக இருட்டு ரூமில் அடைத்து வைத்து பிறகு அதை வெளியே விடுவார்கள்.

அதை சிலர் கொன்று, அதன் காதை அறுப்பார்கள், அந்த மாதிரி கொடுமையெல்லாம் இங்கு கிடையாது, அதனால், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

-http://www.cineulagam.com