தமிழ்நாட்டில் இப்போது பலரையும் அதிரவைக்கும் அரசியல் சூழல் நிலவி வருகிறது. முதல்வர் ஓ.பி.எஸ் நடவடிக்கை பலரையும் வியக்கவைத்துள்ளது. கட்சி பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலா மிது சில குற்றச்சாட்டுகளும் அவரால் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விசு இது குறித்து தனக்கு நடந்த விஷயத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளார். அவர் பேசிய போது பன்னிர் செல்வம் 5 மணிக்கு ஆளுநரை சந்தித்தார். 5 மணி என்பது நேர்மறையானது.
ஆனால் சசிகலா 7.30 மணிக்கு சந்திக்கிறார். 7.30 எதிர்மறையை குறிக்கிறது. நான் ஜெயா டிவியில் மக்கள் அரங்கம் என்னும் நிகழ்ச்சியை நடத்தி வந்தேன். இது குறித்து ஜெயலலிதாவை சந்திக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் சசிகலா தடுத்துவிட்டார்.
முதல்வர் ஓ.பி.எஸ் போல நானும் நிறைய அவரால் அவதிப்பட்டுள்ளேன் என அவர் வெளிப்படையாக கூறினார்.
-http://www.cineulagam.com
https://youtu.be/UZrBUxQ7F6U

























ஐயா விசு அவர்களே– உங்களைப்போன்றவர்கள் மக்களுக்கு பாராபட்ச மற்ற சிந்தனைகளை உறுதியாக நிலை நிறுத்துங்கள் — வாக்குகளை அறிவோடு உபயோகிங்கள்–நாடு வளர உதவுங்கள். ஜாதியை ஒழியுங்கள்.