இவரா முதலமைச்சர்? சசிகலாவின் செயல் என்னை காயப்படுத்துகிறது. கமல் பரப்பரப்பு பேட்டி

kkamalநடிகர் கமல்ஹாசன் இப்போது நடக்கும் அரசியல் நிலை குறித்து தன் கருத்தை வெளியிட்டு வருகிறார். அவர் சமிபத்தில் கூறியதாவது நான் அரசியலில் நடக்கும் நிகழ்வுகளை கவனமாக கண்கானித்து வருகிறேன்.

என்னுடைய கருத்துக்களை யாரும் தங்களுக்கு சாதமாக்கி வேடிக்கை பார்க்ககூடாது என்பதிலும் தெளிவாக் இருக்கிறேன். இதுவரை கடந்த 40 வருடங்களில் எந்த அரசியல் வாதியும் மக்களுக்கு சேவை செய்ததாக தெரியவில்லை.

மக்கள் நாங்களெல்லாம் ஆடுகள் கிடையாது எங்களை மேய்க்க நல்ல ஒரு மேய்ப்பாளர் தேவை என கோரிக்கை வைக்கவில்லை. மிகவும் உழைக்கும் எங்களுக்கு நல்ல உழைப்பாளிகள் தான் வேண்டும்.

பன்னீர் செல்வம் இன்னும் சில வருடங்கள் ஆட்சியை தொடர்ந்தால் என்ன, அவரது ஆட்சி திறமையற்ற ஆட்சிபோல் இருப்பதாக தெரியவில்லை. பின் அது குறித்து மக்கள் முடிவெடுப்பார்கள். அதற்காக நான் அவரின் ஆதரவாளர் என நினைத்து விடாதீர்கள்.

மக்கள் விரும்புவதையே நானும் விரும்புகிறேன். சசிகலா முதல்வராவதில் எனக்கு விருப்பமில்லை. அவரது இந்த முடிவு என்னை காயப்படுத்தியுள்ளது.

நான் மக்களின் ரசிகன் தானே தவிர யாருக்கும் தலைவன் இல்லை என அவர் கூறியிருக்கிறார்.

-http://www.cineulagam.com