நேஷ்னல் மீடியாவை வெளுத்து வாங்கிய பிரகாஷ்ராஜ்

prakash-raj-wallpaper01நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை சந்தித்து தன் ஆதரவை தெரிவித்தார். அவருடன் விஷால் மற்றும் பாண்டிராஜ் ஆகியோர் இருந்தனர்.

அப்போது செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்க தொடங்கினர், “ஒரு நடிகன் வந்திருக்கேன்னதும் இப்ப இவ்ளோ பேரு வர்ரீங்களே 11 நாளா போராடுனாங்களே அப்ப எங்க போனீங்க” என கேட்டார். “தமிழ் மீடியாக்களை அல்ல, நான் சொல்வது நேஷ்னல் மீடியாவை” என பின்னர் விளக்கமளித்தார்.

விவசாயிகள் பிரச்சனையை மாநில பிரச்சனையாக பிரித்து பார்க்காமல், தேசிய பிரச்சனையாக கருதி ஒரு நிரந்தர தீர்வு தரவேண்டும் என அரசையும் அவர் கேட்டுக்கொண்டார்.

-http://www.cineulagam.com