ரஜினிகாந்துக்கு சேரனின் எச்சரிக்கை டுவிட்

cheran2.சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்கும் நபர்களை அருகில் வைத்துக்கொள்ள மாட்டேன் என தெரிவித்திருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இயக்குனரும், நடிகருமான சேரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,

வணக்கம் சார். உங்களை முதல்வர் ஆக்கியே தீருவார்கள். அரசியல் சூழல் அதை உருவாக்கும். மக்களிடமும் நேர்மை குறைந்துள்ளதால் ஜாக்கிரதையாக இருங்கள். களவும் ஊழலும் இலஞ்சமும் சுயநலமும் நேர்மையின்மையும் சூழ்ந்த இந்த அரசியல் உங்களுக்கு ஒத்துவருமா?

உங்களுக்கு பொய் பேசுவதற்கு வராது. அரசியலுக்கு வந்தால் கர்நாடகாவை எதிர்க்க வேண்டும், ஹிந்தி திணிப்பை ஆதரிக்கக்கூடாது, இலவசங்களை கொடுத்தே ஆகவேண்டும், மதுக்கடைகளை மூடக்கூடாது என ஏராளமான சவால்கள் காணப்படுகின்றன.

நீங்கள் நினைப்பது நடக்கவேண்டுமெனில் மக்களோடு களமிறங்குங்கள், கலந்து பேசுங்கள். பகுதி வாரியாக பிரச்சினைகளை தெரிந்துகொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

-lankasri.com