விருந்தாளிகளே படுக்கையில் பங்கு கேட்காதீர்கள்.. தலைமைப் பொறுப்பு தமிழனுக்கே: பாரதிராஜா பேச்சு

barathirajaதமிழகத்தில் தலைமைப் பொறுப்பு என்பது மட்டும், இந்த மண்ணின் மைந்தனுக்கு வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா பேசியுள்ளார்.

சென்னையில் இடம்பெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது, இந்த தமிழ்நாடு மாதிரி ஒரு அற்புதமான நாடு எதுவுமே கிடையாது. வேறு எங்குமே போய் அரசியல் செய்ய முடியாது, ஆனால் இங்கு யார் வேண்டுமானாலும் அரசியல் பண்ணலாம்.

எங்களுக்கும் தேசியப்பற்று உண்டு. ஆனால், எங்கள் தாய்ப்பாலுக்கு பிறகுதான் உலகப்பால். நம்மை அறியாமல் தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

யார் வேண்டுமானாலும் இங்கு சங்கமிக்கலாம். ஆனால் அடையாளத்தைத் தொலைத்துவிடாதீர்கள். யார் வேண்டுமானாலும் விருந்தாளியாக வீட்டுக்கு வாருங்கள் சாப்பிட்டு திண்ணையில் படுத்து உறங்குங்கள்.

எங்களுடைய படுக்கையில் பங்கு கேட்காதீர்கள். தலைமைப் பொறுப்பு என்பது மட்டும், இந்த மண்ணின் மைந்தனுக்கு வேண்டும் என்பதை அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

-lankasri.com