யோகிபி நீண்ட நாள் பாடாமல் இருந்ததற்கு இத்தனை சோகங்கள் அவருக்குள் இருந்ததா?

yogi Bபொல்லாதவன் படத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ என்ற ரீமிக்ஸ் பாடலை பாடி அசத்தியவர் யோகிபி. இதுமட்டுமின்றி பல ஆல்பங்களை இவர் வெளியிட்டும் அசத்தினார்.

அதை தொடர்ந்து இவர் குருவி, எந்திரன், ஆடுகளம் என பல படங்களில் பாடினாலும், இவர் ஆடுகளம் படத்திற்கு பிறகு ஒரு பாடல் கூட பாடவில்லை.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது சர்வைவா பாடலை பாடியுள்ளார், இவர் இத்தனை நாட்கள் பாடாமல் இருந்ததற்கு முக்கியமான காரணம் அவரின் தொண்டை பகுதியில் ஒரு கட்டி வந்ததாம்.

அதை தொடர்ந்து மருத்துவர்கள் அவரை பாடவே கூடாது என்று கூறிவிட்டார்களாம், மேலும், அந்த நேரத்தில் அவருடைய அம்மா இறந்துள்ளார்.

இது யோகிபிக்கு நீங்கா துயரத்தை கொடுக்க, அதோடு அவருடைய பிஸினஸும் மிகவும் நஷ்டமடைந்ததாம், அவர் இத்தனை கஷ்டங்களிலிருந்து மீண்டு வர இத்தனை நாட்களை எடுத்துக்கொண்டாராம்.

தற்போது மீண்டும் பழைய பார்மில் கலக்குவேன் என யோகிபி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

-cineulagam.com