காதல் திரைப்பட காமெடி நடிகர் பிச்சை எடுக்கிறாரா? வைரலாகும் தகவல்

pallu babuபரத், சந்தியா நடித்த காதல் திரைப்படத்தில் தன் வித்தியாசமான தோற்றத்தால் பலரையும் சிரிக்க வைத்தவர் பல்லு பாபு. இவர் அப்படத்தில் விருச்சககாந்த் என சினிமா சான்ஸ் கேட்பது போல வருவார்.

இவரை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குனர் ஒரு நேர்காணல் செய்ய நினைத்தாராம். இதற்காக அவர் பல்லு பாபு தொடர்புகொள்ள முயற்சித்திருக்கிறார்.

ஆனால் அப்போது அவரின் முகவரியோ, தொலைபேசி எண்ணோ எதுவும் கிடைக்கவில்லையாம். இதனால் அவரின் நண்பர் ஒருவரிடம் விசாரித்தபோது அவருக்கு அதிர்ச்சியான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

காதல் படத்தில் விருச்சகாந்த் என பெயர் வைத்துக்கொண்டு. நடிச்சா ஹீரோ சார். நான் வெய்ட் பன்றேன் சார். முதல்ல சினிமா. அப்புறம் அரசியல். அப்புறம் பி.எம் என அவர் பேசிய வசனத்தை கேட்டு சிரிக்காதவர்களே இருக்க முடியாது.

பல்லு பாபு சென்னை, எழும்பூர் அருகில் உள்ள சூளையில் உள்ள கோவில் வாசில் பிச்சை எடுப்பதாக தகவல் கிடைத்தது. அவரை ஒரு வழியாக கண்டுபிடித்த போது அவர் சில விசயங்களை பகிர்ந்து கொண்டாராம்.

மேலும் அவர் காதல் படத்தில் நடித்தேன். பின் எந்த படத்தில் நடிக்க முயற்சி எடுக்கவில்லை. அப்பா அம்மாவும் இறந்தவிட்டதால் இங்கேயே இருந்துவிட்டேன் என பல்லு கூறினாராம்.

அங்குள்ள மக்களும் அவரின் நிலை கண்டு பரிதாபம் அடைந்ததாக சொல்கிறார்கள். பரவிவரும் இந்த தகவலால் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்து அவருக்கு உதவி செய்யும் என்ற எதிர்பார்ப்புள்ளது.

-cineulagam.com