காசு எதிர்பார்க்கும் கமல் சமுதாயம் பற்றி பேசக்கூடாது… பொங்கும் எச்.ராஜா!

hrajaசென்னை : சினிமாவில் காசு சம்பாதிக்கும் நடிகர் கமல்ஹாசன் சமுதாயம் பற்றி பேசக் கூடாது என்று பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்சியில் பேசிய எச்.ராஜாவிடம் கமல்ஹாசனை முதுகெலும்பில்லாதவர் என்று விமர்சிப்பது குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்புகிறார், அதற்கு எச். ராஜா சினிமாவில் காசு சம்பாதிக்கும் நடிகர் கமல்ஹாசன் சமுதாயம் பற்றி பேசக்கூடாது என்கிறார்.

கமல் அரசியலுக்கு வந்தால் திமுகவிற்குத் தான் ஆபத்து. நாத்திக, இந்து விரோத கொள்கையுடைய கமல்ஹாசனை அரசியலுக்கு தூண்டிவிட்டு அவரை தங்களது கட்சியில் சேர்த்துக் கொள்ள நினைத்தால் அது திமுகவிற்குத் தான் ஆபத்து.

திமுகவிற்கு ஆபத்து என்றால், ராஜாவிற்கு மகிழ்ச்சி. கமல் தாராளமாக அரசியலுக்கு வரட்டும், தனிக் கட்சித் தொடங்கட்டும் ஓட்டுகளைப் பிரிக்கட்டும், அது எப்போதும் பாஜகவிற்கு சாதகமாகத் தான் இருக்கும். குண்டர் சட்டத்தில் ஒரு சிலரை போட வேண்டும் என்று வலியுறுத்தும் எச். ராஜா தான், சமூக அமைதிக்கு கேடு விளைவிக்கிறார் என்பதால் அவரை குண்டர் சட்டத்தில் போடலாமா என்று தொகுப்பாளர் கேட்க, என்ன நக்கலாக கேட்கிறார் எச். ராஜா.

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அதாவது நான் என்றோ அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கமல்ஹாசன் வெளிப்படையாக அறிக்கை வெளியிடும் முன்னரே அவரை விமர்சித்திருந்தார் எச்.ராஜா. முதுகெலும்பில்லாதவர் கமல் கோழை ன்றெல்லாம் பேசியதற்காகத் தான் எலும்பு சிகிச்சை வல்லுநர் ராஜா என்று கமல் கிண்டலடித்திருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் அவரை சீண்டி ராஜா பேட்டியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com