இது தான் எனது நோக்கம்..நேரடியாக விமர்சித்த கமல்ஹாசன்

kamal555தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்தும் முதல்வரை எந்த கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் பதிவிட்டுள்ள ட்விட்டில், தனது அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற விபத்து மற்றும் ஊழலுக்காக ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவி விலக வேண்டுமென்றால், தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்தும் முதல்வரை எந்த கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன் என நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், எனது நோக்கம் ஒரு சிறந்த தமிழ்நாடு. என் குரலை பலப்படுத்த யாருக்கு தைரியம் உள்ளது? திமுக, அதிமுக உட்பட மற்ற கட்சிகள் உதவுவதற்கான கருவிகள். அந்த கருவிகள் மழுங்கினால் மற்றவர்களைக் கண்டறிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

-lankasri.com