திருப்பதி செல்லும் நீங்கள் தமிழ்நாட்டில் முருகன் கோயிலுக்கு போகலாமே- அஜித்திற்கு கடிதம் எழுதிய மன்சூர் அலிகான்

Actor Mansoor Ali Khan Press Meet Photosஅஜித்தின் விவேகம் படம் வெளியாகி இப்போது வரை வசூலில் மாஸ் காட்டி வருகிறது. ரசிகர்கள் கொடுத்திருக்கும் வரவேற்பை பார்த்து படக்குழுவும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை பயப்படாமல் கூறும் நடிகர் மன்சூர் அலிகான். தற்போது அவர் அஜித்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தம்பி அஜித்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கள், தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படத்தையும் அயல்நாட்டு தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து எடுத்துவிட்டீர்கள்.

தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் இருக்கிறது, தமிழ்நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும்.

படம் ஓட வேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்பிடுகிறீர் தமிழ் நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோயில்களுக்கு வந்திருக்க கூடாதா? என்று எழுதியிருக்கிறார்.

உரிமையுடன்

நடிப்புத் தொழிலாளி மன்சூரலிகான்

-cineulagam.com