பழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்!

1945 ஆம் ஆண்டு பிறந்த ஜெயந்தி கமலாகுமாரி, ஜெயந்தி(72) என்னும் பெயருடன் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

அந்த வகையில் இன்றைய சினிமாவில், முத்து, எதிர்நீச்சல், வெள்ளி விழா, இரு கோடுகள் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் இவர், பல்வேறு மொழிகளிலும் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கலக்கியவர்.

இந்நிலையில், நேற்று காலை மார்படைப்பு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

-athirvu.com