வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரள மக்களுக்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவி

தற்போது கடும் மழையால் மலையாள மக்கள் அதிகம்பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளைஇழந்துள்ளனர். பலர் உணவு உட்பட அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் உள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் திருவனந்தபுரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.

வெள்ளம் காரணமாக் பல்வேறு பகுதிகளுக்கு உதவிப்பொருட்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு வழி கிடைத்ததும் பல இடங்களிலும் உதவிபொருட்கள் வழங்கப்படும் என விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

-cineulagam.com