இனிமே தமிழ் மட்டும் தான், ஜி.வி.பிரகாஷ் எடுத்த அதிரடி முடிவு- குவியும் ஆதரவு

ஜி.வி.பிரகாஷ் பல சமூக நல விஷயங்களில் ஈடுப்பட்டு வருகின்றார். ஜல்லிக்கட்டு, ஸ்டைர்லைட், நீட் எதிர்ப்பு என தொடர்ந்து பல போராட்டத்திற்கு ஜிவி தன் ஆதரவை தந்து வருகின்றார்.

இந்த நிலையில் ஜிவி தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார், அதை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இதற்கு பெரிய ஆதரவும் கிடைத்துள்ளது.

இவர் டுவிட்டரில் ‘உலகம் வென்ற தமிழ் , நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ் , எனை ஆட்கொண்ட தமிழ், இனி புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன்’ என தெரிவித்துள்ளார். அதாவது இனி தமிழில் மட்டுமே அவர் கையெழுத்து போடுவாராம்.

-cineulagam.com