நட்பிற்காக பாதி சம்பளத்தில் வேலைப்பார்த்த யுவன், யாருக்காக தெரியுமா?

சினிமாவில் இன்று அட்வான்ஸ் என்ற ஒரு தொகை இல்லையென்றால் ஒரு வேலையும் தொடங்காது. அந்த வகையில் பணத்தை வைத்தால் தான் டப்பிங் செய்வேன் என்று பல நடிகர், நடிகைகள் சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய ட்ரெண்ட் இளைஞர்களையும் தன் இசையால் மெய் மறக்க வைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா.

அவர் பல படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகின்றார், இந்த பிஸியான நேரத்தில் கூட ராஜா ரங்குஸ்கி படத்திற்காகவும் தன் நண்பர் சிரிஷ் கேட்டதற்காகவும் பாதி சம்பளத்தில் இந்த படத்திற்கு இசையமைத்து கொடுத்தாராம்.

யுவனுக்கு இது புதிதல்ல, பல இயக்குனர்களுக்கு யுவன் இப்படி பாதி சம்பளத்திலும், ஏன் சம்பளமே வாங்காமல் கூட வேலைப்பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-cineulagam.com