கஜா புயலுக்காக சின்மயி செய்யவுள்ள விஷயம்..

பாடகி சின்மயி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மீடூ சர்ச்சை பற்றி தொடர்ந்து பேசி வருகிறார்.

அதனால் தமிழ் சினிமா துறையே பரபரப்பாக இருந்து வந்தது. சமீபத்தில் அவரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதும் சர்ச்சையானது.

இந்நிலையில் தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்ட ஒரு பாடல் கச்சேரி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அது நாளை சென்னை கிண்டியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

-athirvu.in