கஜா புயலுக்காக விஜய், ரஜினி கொடுத்த நிவாரண நிதி பார்க்கும் போது இதுதான் தெரிகிறது..

கஜா புயலால் மக்கள் பலர் வீடுகள் இழந்து கடும் துயரத்தில் உள்ளனர். எல்லா பக்கத்தில் இருந்தும் தமிழ்நாட்டு மக்கள் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பண, பொருள் உதவி என செய்து வருகின்றனர். பிரபலங்களில் விஜய், அஜித், ரஜினி, கமல் என பலர் நிதி உதவி கொடுத்து வருகின்றனர்.

விஜய், ரஜினி ரசிகர் மன்றங்கள் மூலம் உதவி செய்தது குறித்து கமல்ஹாசனிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு அவர், சந்தேகம் வலுத்துவிட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது. நாம் கொடுக்கும் பணம் தேவைப்பட்டோர்களுக்கு போய்ச்சேருமா? என்ற அவநம்பிக்கை வந்துவிட்டது என்பதை உறுதி செய்கிறது.

இந்த நேரத்திலாவது அரசியல்வாதிகள் ஊழல் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது என கூறியுள்ளார்.

-athirvu.in