மகிழ்ச்சியில் ‘அடங்கமறு’ படக்குழு

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஜெயம் ரவி நடித்து வெளியாகியுள்ள அடங்கமறு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கிறிஸ்மஸ் விடுமுறையைக் கணக்கில் எடுத்து, கடந்த 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் 5 நேரடித் தமிழ் திரைப்படங்கள் மற்றும் ஒரு கன்னட மொழிமாற்றுப் படம் என, 6 படங்கள் ரிலீஸாகின. அதில் விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி திரைப்படம் ஒரு நாள் முன்பே 20 ஆம் திகதி ரிலீஸானது.

சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் ரெட் ஜெய்ண்ட் மூவிஸின் உதவியை நாடி தியேட்டர்களைப் பிடித்தது. கனா சிவகார்த்திக்கேயனின் தயாரிப்பு என்ற விளம்பரத்தால் தியேட்டர்களைக் கவர்ந்தது. சீதக்காதி விஜய் சேதுபதியின் கடந்த கால வெற்றிகளால் போதுமான தியேட்டர்களைகளை பெற்றது, கன்னட மொழிமாற்றுப் படமான கே.ஜி. எஃப் நடிகர் சங்கத் தலைவர் விஷாலின் விநியோகத்தால் வெளியானதால் ஓரளவுக்கு தியேட்டர்களைப் பெற்றது. ஆனால் ஜெயம் ரவி நடித்த அடங்கமறு எந்த உதவியும் இல்லாமல் கிடைத்தக் குறைவான தியேட்டர்களில் ரிலீஸானது.

இப்போது படங்கள் எல்லாம் ரிலீஸாகி 3 நாள்கள் ஆகியுள்ள நிலையில் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள படமாக ‘அடங்கமறு’ இருக்கிறது. சுவாரசியமானத் திரைக்கதையாலும் ஜெயம் ரவியின் சிறப்பான நடிப்பாலும் படம் மக்களைக் கட்டிப்போட்டுள்ளது.

சீதக்காதி ஆமைவேகத் திரைக்கதையாலும், முதல் 40 நிமிடங்களே விஜய் சேதுபதி வருவதாலும் இரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மாரி 2 வின் மோசமான திரைக்கதையாலும் இரசிகர்களைக் கவர தவறியுள்ளது. கனாப் படம் கிரிக்கெட் மற்றும் விவசாயம் போன்ற வெகுஜன இரசனைக்கு உட்படுத்தும் விஷயங்களைப் பற்றி பேசியுள்ளதால் மக்களுக்கு திருப்தியடைந்துள்ளது.

சிலுக்குவார்ப்பட்டு சிங்கமோ காமெடிப் படமாக இருந்தாலும், இரசிகர்களுக்கு பெரிய அளவில் திருப்தியளிக்கவில்லை. அதனால் இரசிகர்கள் மத்தியில் அடங்கமறு படத்திற்கு வரவேற்பு அதிகமாகி உள்ளது.

இதனால் அடுத்த வாரம் முதல் அடங்கமறு திரைப்படத்துக்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகமாகும் எனத் தெரிகிறது. இதனால் அடங்கமறுப் படக்குழு மகிழ்ச்சியில்  உள்ளது.

-tamilmirror.lk