சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் பிரகாஷ்ராஜ்: நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கூறியது என்ன?

இந்த (2019) புத்தாண்டு இப்படியாக தொடங்கி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்குவதாக அறிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

#JustAsking ஹாஷ்டேக்கில் கடந்த ஓராண்டாக பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.கவை கேள்வி கேட்டு வந்தார் பிரகாஷ் ராஜ்.

இன்று அவர் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கும் புத்தாண்டு வாழ்த்து செய்தியில், ‘நான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ஒரு தொகுதியில் களமிறங்க போகிறேன் என்றும், எந்த தொகுதி என்று விரைவில் அறிவிக்கிறேன்’ என்றும் கூறி இருக்கிறார்.