எதிர்ப்புக்கு நடுவில் சர்ச்சையான விசயத்தில் இளையராஜா எடுத்த முடிவு!

அண்மையில் நடிகர் விஷால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது பரபரப்பாக செய்தியாக இருந்தது. தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் தலைவராக இருக்கும் அவர் மீது சிலர் அதிருப்தி தெரிவித்திருந்தார்கள்.

மேலும் இளையராஜாவுக்கு விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்ததோடு அவர் மீதும் குற்றச்சாட்டை எடுத்து வைத்தனர். இதில் இளையராஜா தயாரிப்பாளர் சங்கத்திற்கு ராயல்டி கொடுக்க வேண்டுயுள்ளது என கூறியிருந்தனர்.

இந்நிலையில் இளையராஜா குறிப்பிட்ட சதவீத தொகையை தயாரிப்பாளர் சங்கத்திற்கும், மியூசிக் யூனியனுக்கும் கொடுக்க முடிவெடுத்துள்ளாராம். விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-cineulagam.com