கொத்தடிமைகள் மறுவாழ்வுக்கு விஜய் சேதுபதியின் மாபெரும் உதவி…

நடிகர் விஜய் சேதுபதி, நடிப்பையும் தாண்டி சமூக அக்கறைகள் கொண்டு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். தற்போது கொத்தடிமைகள் மறுவாழ்வு சங்கத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவியும், கார் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.

கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட பச்சையம்மாள் என்பவர் கொத்தடிமைகள் மறுவாழ்வு சங்கத்தின் மூலம் பணி செய்து வருகிறார். இச்சங்கத்தின் தலைவராகவும் இவர் இருந்து வருகிறார். இவர் விஜய் சேதுபதியிடம் தங்களுக்கு ஓர் அலுவலகம் மற்றும் கார் இருந்தால் பாதிக்கப்பட்ட கொத்தடிமைகளை மீட்க உதவியாக இருக்கும் என்று கோரிக்கை ஒன்றை வைத்தார்.

இந்நிலையில் அந்தக் கோரிக்கையை ஏற்று நேற்று முன்தினம் விஜய் சேதுபதி அலுவலகத்தில் இருந்து வந்தவர்கள் செங்கல்பட்டில் இருந்து இயங்கி வரும் கொத்தடிமைகள் மறுவாழ்வு சங்கத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவியும், கார் ஒன்றையும் நடிகர் விஜய் சேதுபதி சார்பில் பரிசாக வழங்கிவிட்டுச் சென்றனர்.

-nakkheeran.in