முகத்தில் பலமான அடி, அவமானம், கேலி! நடிகர் பிரகாஷ் ராஜ் மனவேதனை

தமிழ் சினிமாவில் தன் தனி நடிப்பு திறமையால் பலரின் மனங்களை கொள்ள கொண்டவர் பிரகாஷ் ராஜ். ஹே செல்லம் என அவர் கில்லி படத்தில் சொல்லும் வார்த்தை அவருக்கே அடைமொழியாகிவிட்டது.

சில கிராமங்களை தத்தெடுத்து பல நலத்திட்ட உதவிகளை அங்குள்ள மக்களுக்கு செய்து வந்தார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூர் தேர்தலில் போட்டியிட்டார்.

வாக்குகள் எண்ணப்பட்டதில் அவர் மிகவும் பின் தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் டிவிட்டரில் என் முகத்தில் பலமான அடி, அதிக கேலி, கிண்டல், விமர்சனங்கள், அவமானம் என் பாதையில். இருந்தாலும் நான் களத்தில் நிற்பேன். மதச்சார்பற்ற இந்தியாவிற்காக நான் போராடுவேன். கடினமான பயணம் தொடங்கியுள்ளது. இந்த பயணத்தில் என்னுடன் நிற்பவர்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்தி என கூறியுள்ளார்.

-cineulagam.com