பொன்னியின் செல்வனில் இணைந்த பாலிவுட் நடிகை

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ளார்.

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்துவருகின்றனர். அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதாக இருக்கும் சூழலில், இந்த படத்தில் இந்தி, தெலுங்கு திரையுலகங்களில் புகழ்பெற்ற சோபிதா துலிபலா இணைந்திருக்கிறார். இந்த தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோபிதா அறிவித்திருக்கிறார்.

ராமன் ராகவ் 2.0, மூதோன், த பாடி ஆகிய திரைப்படங்களின் மூலம் புகழ்பெற்ற சோபிதாவுக்கு தென் இந்திய சினிமாவிலும் நல்ல வரவேற்பு இருந்தது. பெரும்பாலும் அனுராக் காஷ்யப்புடன் தொடர்புள்ள படங்களில் மட்டுமே சோபிதா தலைகாட்டுவார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இணைந்ததன் மூலம் தமிழ்த் திரையுலகிலும் சோபிதா வரவிருக்கிறார்.

maalaimalar