மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு, தமிழக அரசு வலியுறுத்தல்

தமிழக மீனவர்களின் விசா காலாவதியாகி உள்ளது. மீனவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களின் விசா காலாவதியானது. மேலும் ஓமன் நாட்டவரால் ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படாததால் தாயகம் திரும்ப முடியாமல் மீனவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

அவர்களை மஸ்கட்டிலிருந்து திருப்பி அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்தி, தூதரக அளவில் தேவையான அனைத்து உதவிகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

-mm