இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

ராக்கெட்டுக்கான கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்கு துவங்கியது. இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இன்று முதல்முறையாக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது.

எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படுகிறது. இந்நிலையில், இதற்கான கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 2.26 மணிக்கு துவங்கியது. இதையடுத்து, இன்று காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

இந்த எஸ்எஸ்எல்வி- டி1 ராக்கெட்டில் இஓஎஸ் 02, ஆசாதிசாட் என்கிற இரண்டு எடை குறைந்த செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. எடை குறைந்த சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் வகையில் எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

120 டன் எடை கொண்ட எஸ்எஸ்எல்வி ராக்கெட் 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்லும் என்பது இதன் சிறப்பம்சம். பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போல் எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். மேலும், இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்று 25 மணிநேரம் இல்லாமல் குறைந்த கவுன்ட்டவுன் நேரத்தில் பாய உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

-mm